என்னை வியத்த பறவை
ஒன்று என் முற்றத்தில் நின்று
என்னை பார்த்து கேட்டது.....
இது உன் வீடா என்று...
குழி விழுந்த கன்னம்....
முகத்தில் பரு....
காதல் தோல்வி ...
காரணங்கள் பலவாறாக கற்பிக்க பட்டாலும் -
எல்லோரிடமும் சொல்லி கொண்டிருக்க முடியாது
பிளேடுகளின் மீதான வெறுப்பு
அம்மாவின் தாலி
அறுபட்டதில் இருந்து தொடங்கியது என்பதை.